பாரதம் போற்றும் பா ரதி...! 067
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பாரதம் போற்றும் பா ரதி..
இலக்குமியின் கருவைச் சுமந்த இலக்கியவாதியே,
உலகோர் போற்றும்
உன்னத தியாகியே,
எட்டாத உயரத்தை
நான்கு எட்டால் எட்டிப்பிடித்த
எட்டய புறத்தானே ,
தேச விடுதலைக்கு
வீறு கொண்டு கர்ஜித்து
புரட்சிப் பாடல் புனைந்தாயே ,
பெண் விடுதலை
வேண்டும் என்றாய் ,
கண் போல் பெண்களை
காக்கவும் செய்தாய் ,
பட்டங்கள் ஆளவும்
சட்டங்கள் செய்யவும்
பெண்களை பாரினில்
வளரச் செய்தாய் ,
தீண்டாமை என்னும்
தீவினை அழிக்க
ஆண்டாண்டு காலம்
உரக்க உரைத்தாய் ,
சாதிகள் இல்லையென்றே
வாதித்த வேதிகனே ,
ஏர்முனை போன்ற
எழுதுகோலின்
கூர்முனை கொண்டு
பாரதம் உழுதாய்,
பன்மொழி கற்றதாலா
நீ அறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல்
யாதுமில்லை என்றாய்,
காசி நகர் செய்த
புண்ணியமா உன்
பாதம் சுமந்தது
நான்கு ஆண்டுகள் ,
கங்கையும் கருணையாய்
தமிழை நாடி
பொங்கியே வந்தாள்
உன் சுவாசம் தேடி,
தனி ஒருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தை அளிக்க
வேண்டும் என்றாய் ,
காக்கை குருவிக்கு
கூட பசியாற்றி
யாக்கை குளிர
பாட்டும் பாடினாய் ,
பா புனைந்த பாரதியே
என்றும் பாரதம்
போற்றும் பா ரதியே
தமிழ் உள்ள வரையில்
உன் நாதம் ஒலிக்கட்டும் ,
தலை வணங்குகிறேன்
உன்னால் பாரதம்
ஜொலிக்கட்டும். ...
- நன்றி கவிஞர்
முனைவர் சகுந்தலா ராமலிங்கம், உடுமலைப்பேட்டை.
Comments (0)