அண்ணல் அம்பேத்கர் 039
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
அண்ணல் அம்பேத்கர்
மத்திய பிரதேசத்தில் பிறந்த மாணிக்கமே
மக்களின் துயர துடைக்க வந்த தலைமகனே
ஏழ்மை சூழலில் பிறந்த அண்ணலே
ஏழை மக்கள் ஏற்றம் பெற பாடுபட்டவரே
மேலைநாட்டுக் கல்வியில் சிறந்தவரே
மேட்டுக்குடி அஞ்சும் அறிவுச்சுடரே
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரே
சட்டங்களை கட்டமைக்க வழிவகை செய்தவரே
சாதி மத பாகுபாடு ஏதுமின்றி
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று
சூளுரைத்து வெற்றிக்கொடி நாட்டி
நாட்டின் இறையாண்மைக்கு வித்திட்ட வித்தகரே
இருட்டில் இருக்கும் ஏழைகள் வாழ்வில்
ஒளி ஏற்ற தூண்டுகோலாக இருந்த மாவீரனே
நீரிழிவு நோய் ஆட்கொண்டு கண்பார்வை
மங்கிய போதும் உலகத்தின் பார்வையில்
சுதந்திர இந்தியாவின் ஒளியை
சுடர் விட்டு பிரகாசிக்க செய்த அண்ணலே.
- சு. நடராஜன் ,
சிவகிரி ,
ஈரோடு மாவட்டம்.
Comments (0)