பெண்களும்.. மாற்றமும்...
பெண்களும்
மாற்றமும்
பேருலகின்
கிளர்ச்சி//
மண்ணிலும்
பெண்ணிலும்
மறு உயிர்
வளர்ச்சி//
தாயெனும்
பெண்ணினால்
தரணியில்
உதித்தவள்//
சேயாகி
வளர்ந்து
பல்லுயிர்
பதித்தவள்//
புரிந்திடா
பேதையாய்
பெதும்பையாய்த்
துளிர்ந்தவள்//
தெரிந்திடும்
மங்கையாய்
மடந்தையாய்த்
தளிர்ந்தாள்//
அரிவையாய்
தெரிவையாய்
அகத்தில்
வாழ்கிறாள்//
பெரியவள்
பேரிளம் பெண்ணாய்
ஆள்கிறாள்//
உள்ளவர்
ஏழையர்
உற்றவர்
மற்றவர்//
கள்ளவர்
நல்லவர்
கற்றவர்
மூடர்கள்
ஒள்ளியர்
குண்டவர்
ஒன்றி
மணக்கிறாள்//
பிள்ளையாய்
வளர்ந்தவள்
பிள்ளையும்
பெறுகிறாள்//
தெள்ளிய
அறிவொடு
திறனாய்
வளர்கிறாள்//
பிள்ளைகள்
படித்திடில்
நீக்கம்
செய்கிறாள்//
அள்ளி
அறிவை
ஆசானாய்
அளிக்கிறாள்//
வள்ளலாய்
அன்பை
வழங்குபவள்
தோழியாய்//
மற்றவர்
பசிக்கு
மாண்பாய்
சமைக்கிறாள்//
குற்றமே
செய்யினும்
குடும்பம்
இணைக்கிறாள்//
சுற்றம்
சொந்தம்
சூழப்
பிணைக்கிறாள்//
கற்பினைக்
காக்கிறாள்
கற்பனை
நீக்குறாள்//
உருவமும்
தோற்றமும்
உலகினில்
ஏற்றமும்
பருவத்தில்
ஆற்றலும்
பலநிலை மாற்றமே//
மனைவியாய்த்
தாயாய்
பாட்டியாய்
வாழ்க்கையில்//
அனைத்திலும்
மாற்றம்
அடைவது பெண்களே//
கவிதாயினி:- வினாயகமூர்த்தி-அபிவர்ணா
மூங்கிலாறு வடக்கு,
உடையார்கட்டு,
முல்லைத்தீவு,
இலங்கை.
Comments (0)