ரோஜா தினம்
ரோஜா தினம் கவிதை
ரோஜா ரோஜா
வண்ண நிறத்தில்
வடிவாக நீ
கண்ணைப் பறித்து
கவர்கிறாய் நீ
காந்தமாய் ஈர்த்து
மனதைக் களவாடுகிறாய் நீ
மென்மையான பட்டு
மேனியோடு தென்றலைக்
கொஞ்சுகிறாய் நீ
இதழ்களால் இனிக்கிறாய்
இதயங்களைத் தொடுகிறாய் நீ
முதல் காதல்சொல்ல
முன்னிலையில் நிற்கிறாய் நீ
விழாக்களின் போது
வினோதமாய் ஆகிறாய் நீ
உலவிடும் பொழுதுகளில்
உள்ளத்தைக் கொய்கிறாய் நீ
பல சிகை அலங்காரத்தில் பயன்பாடாயிருக்கிறாய் நீ
எங்கு சென்றாலும்
எதிலும் பதிலுமாக நீ
பங்கு கொள்ளுமிடத்திலும்
பார்த்திடத் தூண்டும் நீ
அழகாய்த் தோன்றினாலும்
அருகில் முள்ளோடு நீ
உன்னைப் பறித்தால்
குத்திடுவேன் என்கிறாய் நீ
வலியினைத் தந்து உதிரம் சொட்டினாலும்
உன்னைத் தொலைக்க மனமே வராது
எனென்றால் உன்னை நான் விரும்புகின்றேன்
ரோஜா ரோஜா ரோஜா..
கிருஷ் அபி, இலங்கை.
Comments (0)