நீடு துயில் நீக்க வந்த நிலா...!
பாரதியார் நினைவு தினம் கவிதை
நீடு துயில் நீக்க வந்த நிலா
தமிழ் மொழியின் நவரத்தின தூவலனே//
உன்னுடைய பாடல்களே சுதந்திர கீதமாகும்//
அதுவே நாம் பெற்ற வேதமாகும்//
உன்னுடைய எழுத்துக்களே சுதந்திர கருவூலமாகும்//
முக்காலத்திற்கும் நமக்கு கலங்கரை விளக்கமாகும்//
விடுதலை வீரர்களை உருவாக்கிய முத்தே//
வைராக்கியத்துடன் வைரிகளை எதிர்த்த வைரமே//
வந்தே மாதரம் முழக்கமிட்ட வைடூரிபமே//
பெண் விடுதலைக்கு பாடுபட்ட மாணிக்கமே//
நீலக் கண்ணனை பாடிய நீலமே//
ஓடி விளையாடு பாப்பாக்களின் மரகதமே//
அச்சமில்லை என முழக்கமிட்ட புஷ்பராகமே//
செந்தமிழ் நாடு பாடிய பவழமே//
தமிழனுக்கு பெருமை சேர்த்த கோமேதகமே//
நவரச மாலையான உன்னை போற்றி//
நான் பாடும் நவரத்தின மாலை //
லதா சங்கரன்
சென்னை
Comments (0)