நீடு துயில் நீக்க வந்த நிலா...!

பாரதியார் நினைவு தினம் கவிதை

நீடு துயில் நீக்க வந்த நிலா...!

நீடு துயில் நீக்க வந்த நிலா 


தமிழ் மொழியின் நவரத்தின தூவலனே//

 உன்னுடைய பாடல்களே சுதந்திர கீதமாகும்//

 அதுவே நாம் பெற்ற வேதமாகும்//

 உன்னுடைய எழுத்துக்களே சுதந்திர கருவூலமாகும்//

முக்காலத்திற்கும் நமக்கு கலங்கரை விளக்கமாகும்//

 விடுதலை வீரர்களை உருவாக்கிய முத்தே//

 வைராக்கியத்துடன் வைரிகளை எதிர்த்த வைரமே// 

 வந்தே மாதரம் முழக்கமிட்ட  வைடூரிபமே//

 பெண் விடுதலைக்கு பாடுபட்ட மாணிக்கமே//

 நீலக் கண்ணனை பாடிய நீலமே//

 ஓடி விளையாடு பாப்பாக்களின் மரகதமே//

 அச்சமில்லை என  முழக்கமிட்ட புஷ்பராகமே//

 செந்தமிழ் நாடு பாடிய பவழமே//

 தமிழனுக்கு பெருமை சேர்த்த கோமேதகமே//

 நவரச மாலையான உன்னை போற்றி//

 நான் பாடும் நவரத்தின மாலை //


லதா சங்கரன் 
சென்னை