உன் விழி...024
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
உன்னை பார்த்த சில நொடியில் உன் முகம் மறந்தேன்..
உன் விழி பேசும் மொழி அறிய வழி தேடினேன்
வழி அறியாமல் தொலைந்தேன் உன் விழி ஓரத்தில்
விழி அசைய உரைந்தேன் ஓரிடத்தில்
எனை மறந்தேன் உனை மறந்து உலகம் மறந்தேன்
மறந்த உலகில் உனை மறந்தும் தேடி அலைந்தேன்
இமைக்காமல் என் இமை நிலை தடுமாற
உன்னை கண்ட இடத்திலே என் நிலை சிலையாகி இளைப்பாற
தென்றல் காற்றோ என் மனதில்
புயலாய் அடிக்க
என் மனம் துடிக்க
தொலைந்த இடத்தில் எனை தேடி அலைந்தேன்
உன்னை என்னிடதில் சேர்த்து எனை இணைத்தேன்
வார்த்தை வாய் தடுமாறி நன் உலற
உலறிய என் வார்த்தை என் காதல் சொல்ல
நீ வெட்கத்தில் விலகி செல்ல
நானும் தயக்கதுள்விலகி சென்றேன்
விலகி செல்லும்போது உன் விழியின் விரல் கொண்டு
என் மனம் பிடித்த நீ
விரல் பிடித்த பின் உன் விழி இமைத்து விலகி செல்வதேன்
இறையன்பு சு ஆ,
I B.sc DCFS
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை
Comments (0)