அன்பே போற்றுவோம் ...! 008

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

அன்பே போற்றுவோம் ...! 008

அன்பை போற்றுவோம்...

இருமனங்கள் இறைவனால் இன்புற்று சந்தித்தது..
இதயத்தால் அன்பு புரிதலோடு தொடங்கியது..
இடையிடையே இரண்டும் மௌனத்தில் பேசியது..
இடைவிடாமல் துடிக்கும் இதயம், இடமாறி துடித்தது..

உணர்வுகளை பரிமாறி உற்சாகமாக பயணம்..
உன்னதமான காதல் உதட்டில் புன்னகையோடு..
உலகம் அழகாய் காட்சி அளிக்க..
உடனிருப்பதாக கற்பனை ஒவ்வொரு நொடியும் பிரதிபலிக்க..

அவளின்றி நாட்கள் வெறுமையாக தோன்றும்..
அவளோடு சேர்ந்திருக்க நொடிகள் ஏங்கும்..
மாய சக்தியோ, காந்த சக்தியோ காதல்...
மாற்றத்தோடு மனதை மயக்கும் மெல்லிசை...

உண்மை காதலை உணர்வுபூர்வமாக போற்றுவோம்!
காதலின் தூய்மையை உணர்ந்து மதிப்போம் !
காதலை உயிரென வாழ்ந்து மறைந்த இலக்கிய சான்றுகள்...
இன்னொரு இலக்கிய காதலாக நம் அன்பை
பறைசாற்றுவோம்!


-திருமதி.இரா.காயத்ரி
தருமபுரி மாவட்டம்.