பிரியமான காதலிக்கு... 025

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

பிரியமான காதலிக்கு... 025

பிரியமான காதலிக்கு...!

காத்திருக்கும்
நொடிகளெல்லாம்
கவிதைகளாய்
கரையுதடி
உறைந்து போன
உன் காதலை
எப்படியடி
உருக வைப்பது...!

உன்னை நினைத்து
என் உயிரும்
உறைந்தே போனதடி
உலகத்தில் 
எதுவுமே 
பிடிக்கவில்லையடி...!

உன் உருவம்
கண்ட பின்பு
வெள்ளை மனம்
கொண்டவளே
என் மனம்
உணரவில்லையா...!

கள்ளமின்றி சிரிப்பவளே
என் கன்னங்களில்
கண்ணீர் தீண்டி
போவது புரியவில்லையா
காரணமே இன்றி
உன்னை காதலிக்கும்
என் கண்களை
குருடாக்கிக் கொள்ளவா...!

சதா சர்வ காலமும்
உன்னை நினைக்கும்
என் இதயத்தை
இரும்பாக்கி கொள்ளவா
தென்றல் தீண்டாத
மலரைப் போல்
உன் கண்கள் தீண்டாத
கவிதை நான்...!

உன்னை எப்படி
காதலிப்பது
எனக்கு 
தெரியவில்லையடி
உனக்கு தெரிந்தால்
கொஞ்சம்
சொல்லிப் போ...!

காதல் காவியங்கள் 
பல படித்து விட்டேன்
இரவுகளை வெறுமையாய்
நகர்த்திவிட்டேன்
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்...! 

என் காதலே 
காவியம் படைக்க வா...!

முனைவர் ம.ப.சாந்தி சங்கரி,புதுச்சேரி.