அறிவுச் சுடர் அம்பேத்கர் 054

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவுச் சுடர் அம்பேத்கர் 054

அறிவுச்சுடர் அம்பேத்கர். 
தமிழ் வருடப் பிறப்பில் மலர்ந்த தங்கமே
தன்னிகரற்ற தலைவன் நீயே 
பெற்றோர் இட்ட பெயர் வேறு
ஆசிரியர் மீது கொண்ட பேரன்பால்
அவர் பெயரை தன்னுடன் இணைத்தவரே
பட்டியல் இன மக்களின் பாதை நீரே
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
ஏட்டளவில் இருந்த பொன் மொழியை
உண்மை என உரக்கக் கூறி உலகறியச்
செய்து ஊமை நெஞ்சில் பால் வார்த்தீர்
தீண்டாமையை கனல் வார்த்தைகளால்
தீயிட்டுக் கொளுத்தி தீபம் ஏற்ற வைத்தீரே
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம் என்று
உரைத்த பாரதியின் கனவை நனவாக்கினீர்
தரணி போற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மூளையே மூலாதாரமே
சட்டத்தின் வலிமையை சாமானியரும்
அறியச் செய்த அண்ணலே தியாகமே
ஒடுக்கப்பட்டோம் என்று ஒதுங்கிய
மக்களை சபைதனில் ஏற்றி சாதிக்கச் செய்தீர்
தரணி உள்ளவரை நின் புகழ் நிற்கும்..!


-ல. மதுமதி லட்சுமணன் உசிலம்பட்டி மதுரை மாவட்டம் ,உதவி தலைமை ஆசிரியை,