காந்தியின் பார்வையில் பாரதம்
காந்தி ஜெயந்தி கவிதை
காந்தியின பார்வையில் பாரதம்
பாரதத்து நாட்டிலே பார்போற்ற வாழ்ந்தவர்// நம்மை தேசப்பிதே என்றுரைக்க வைத்தவர்// அகிம்சை நிலையிலே ஆவதை அறிந்தே// அதையே வாழ்வின் கொள்கை ஆக்கினார்// அடுத்தவர் மனதை பாதிக்காத வகையில்// தனது செயலை மாற்றி அமைத்தார்// எதிரே இருந்தவர் கருத்தையும் கேட்டு// வாழ்ந்திடச் சொன்னார் வாழ்ந்து காட்டினார்// பெரியாருக்கு மரியாதை தந்தே தனது// சிறுவயது முதலாய் செயல்முறை செய்தார்// மகாத்மா காந்தியை அண்ணல் அடிகளை// உத்தமரை என்றும் மறவாது நம் இந்தியா// எளிமையும் சிக்கனமும் உன் வாழ்வே இலக்கணம்// கல்லாமை அகற்றினாய், கல்வியை நிலைநிறுத்தி காட்டினாய்// பதவியை விரும்பாத பண்பாளர் அகிம்சை// வழியில் போராடி வெற்றி கண்டவர்// காலத்தால் அழியாத சரித்திர நாயகனே// மக்கள் போற்றும் மகாத்மா காந்தியே// இந்த தேசம் உள்ளவரை தரணியில்// உன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்//
-வி.கணேஷ் பாபு, ஆரணி
Comments (0)