சைக்கிள் தினம் கவிதை
சைக்கிள் தினம் கவிதை
மகிழ்ச்சி பண்பலை கொண்டாடும் சைக்கிள் தினம்
சிரிப்புக் குதிரை என்றிட்டார் வந்தபோதிலே
சிறப்பான கண்டுபிடிப்பை பகடி நோக்கிலே
சிந்தனைதான் செய்திடுக நல்ல வாழ்க்கையை
சீராக்கும் நம்முடலை நலமான போக்கிலே
ஈருருளி என்ற பெயர் நன்றாய் உள்ளது
ஈகைப்போல நல்வாழ்வு நமக்கு தருகுது
கரிம எண்ணெய் மாசதனை தடுக்கின்றதே
காலன் நம்மை நெருங்காமல் காக்கின்றதே
வருடம்நூறு வாழ்ந்திடலாம் சைக்கிள் ஓட்டினால்
வகையுணர்ந்து வாங்கிவிடு ஓர் சைக்கிளை
தகடூர் சு.தமிழரசன்
தருமபுரி
Comments (0)