அறிஞர் அண்ணா ஒரு ஆலமரம்...! 048

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா ஒரு ஆலமரம்...! 048

அறிஞர் அண்ணா ஓர்  ஆலமரம்! 

கடமை கண்ணியம் கட்டுப்பாடு  பூண்டு காஞ்சிபுரத்தில்  உதித்த உதயசூரியன்! 
பழுமரம் தீண்டிய பறவைகள் எல்லாம்
தமிழகமெங்கும் பயணிக்க வைத்தவர்! 

அனைத்துப் பட்சிகளும் தங்க வைத்து
அணைத்து அழகு பார்த்த ஆலமரம்! 
திராவிடக் கட்சிகளை உலகறிந்த
தேசியக் கட்சிகளாக உருவாக்கியவர் ! 

மேடைப் பேச்சின் மூத்த பிதாமகர்?! 
நாடகம் நாவல்கள் படைத்தளித்தவர்! 
நாவில் தமிழால் இனிக்கச் செய்தவர்! 
சமூக நல்லிணக்கம் போதித்தவர்! 

மேலிடும் செயலெல்லாம் தமிழமுதம்! 
மேதினியில் தழைக்க வைத்த வீரியம்! 
மொழிப்பற்று ஒன்றே கொள்கையாம்! 
தமிழ்மொழி மட்டுமே இவர் தாற்பரியம்!

           சுத்தமல்லி உமாஹரிஹரன்
                        திருநெல்திருநெல்வேலி .