மாமேதை அம்பேத்கர் 053

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

மாமேதை அம்பேத்கர் 053

மாமேதை அம்பேத்கர்

இளமையை வருத்திய வறுமை//

அளவில்லாத தீண்டாமை எனும் பெரும் கொடுமை//

இருப்பினும் மனதினில் ஏனோ தெளிவு//

கல்விதான் இதற்கு ஒரே முடிவு//

பரோடா மன்னரின் உதவி//

கொலம்பியா பல்கலைக்கழகம்//

அரசியல், வரலாறு சட்டம்//

 தத்துவம் அனைத்திலும் பட்டம்//

அமெரிக்க உயர்நிலைக் கல்வியில் முதல் இந்திய மாணவர்//

இந்திய சுதந்திர அரசியலில் முதல் சட்ட மந்திரி ஆனவர்//

சமூக புரட்சியின் நீதியர்//

புத்த மதம் சேர்ந்த போதகர்//

காணிக்கை கல்வியில் செலுத்துவீர்//

 பயனாக சமத்துவம் எய்துவீர்//

சகோதர அன்பினால் சேருவோம்//

 சமத்துவ சுதந்திரம் ஓதுவோம்//

சிங்கமாய் நடை பயில வைத்தவர்//

இவரே நம் தந்தை அம்பேத்கர்//


-இரா. ரம்யா துவாரக்தாஸ்
 சென்னை.