மாமேதை அம்பேத்கர் 053
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
மாமேதை அம்பேத்கர்
இளமையை வருத்திய வறுமை//
அளவில்லாத தீண்டாமை எனும் பெரும் கொடுமை//
இருப்பினும் மனதினில் ஏனோ தெளிவு//
கல்விதான் இதற்கு ஒரே முடிவு//
பரோடா மன்னரின் உதவி//
கொலம்பியா பல்கலைக்கழகம்//
அரசியல், வரலாறு சட்டம்//
தத்துவம் அனைத்திலும் பட்டம்//
அமெரிக்க உயர்நிலைக் கல்வியில் முதல் இந்திய மாணவர்//
இந்திய சுதந்திர அரசியலில் முதல் சட்ட மந்திரி ஆனவர்//
சமூக புரட்சியின் நீதியர்//
புத்த மதம் சேர்ந்த போதகர்//
காணிக்கை கல்வியில் செலுத்துவீர்//
பயனாக சமத்துவம் எய்துவீர்//
சகோதர அன்பினால் சேருவோம்//
சமத்துவ சுதந்திரம் ஓதுவோம்//
சிங்கமாய் நடை பயில வைத்தவர்//
இவரே நம் தந்தை அம்பேத்கர்//
-இரா. ரம்யா துவாரக்தாஸ்
சென்னை.
Comments (0)