எனக்குள் பூத்திருக்கிறாய்...

காதல் கவிதை

எனக்குள் பூத்திருக்கிறாய்...

உனக்கு ,என்னை காக்க வைப்பது சுகம் என்றால் !!

எனக்கு ! உனக்காக காத்திருப்பது வரம் என்பேன்!!

பூத்து விட்ட கோலம் கண்டு  !
புதுக்கவிதை படைத்தவன் நான் அல்லவா!

பூவிதழ் தீண்டாத
புதுக்கவிஞன்
நானல்லவா!

பூக்கோலம் போடும் உன் விழிகள் கண்டு!
பூங்கவிதை படைத்தவன் நான் அல்லவா!

பூவுக்குள் தேன் இருப்பது வண்டுக்கு தெரியும்!!

எனக்குள் நீ பூத்திருப்பது யாருக்குத் தெரியும்!!

கவிதை மாணிக்கம்.