சட்ட மாமேதை அம்பேத்கர் 032
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
சட்ட மாமேதை அம்பேத்கர்
மத்திய பிரதேசத்தில் பிறந்தவரு
மும்பையில் படித்தவரு
மேற்படிப்புக்கு மேலை நாடு சென்றவரு.....
வெள்ளை சட்டை கருப்புகோட்டு அணிந்தவரு சட்டபடிப்பு படிச்சவரு
சட்டமேதை ஆனவரு.....
தீண்டாமை ஒழிச்சவரு
தீமையினை அறுத்தவரு.....
அரசியல் சட்டம் வகுத்தவரு
அமைதியை தந்தவரு.....
தன்னடக்கம் மிக்கவரு
தனி வாக்குரிமை தந்தவரு.....
மக்களின் அறியாமையும் மூடநம்பிக்கையும் வேரறுத்தவரு.....
வால் கத்தி போராட்டத்தைவிட கல்வி மூலம் போராடி வெற்றி கண்டவரு.....
ரிசர்வ் பேங்க் உருவாக காரணமானவரு.....
சுதந்திரத்தின் முதல் சட்ட அமைச்சரானரு.....
மன்னராட்சியை விட மக்களாட்சி சிறந்தது என்றாரு.....
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம்பரவட்டும் என்றாரு....
புத்தாண்டில் மலர்ந்தவரு
மக்களின் மகிழ்ச்சி கண்டவரு.....
புதுசு புதுசாய் கற்றவரு
புதுமைபல தந்தவரு.....
ஆசானின் அன்பினால் அம்பேத்கர் ஆனாரு
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனாரு.....
உறங்கும்போதே உயிர்நீத்தார் நம் உத்தமரு.....
- கு.வேலம்மாள்
இடைநிலை ஆசிரியை
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி
பொந்தம்புளி
கமுதி வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்.
Comments (0)