சட்டத்தின் தலை மகன் 003
அறிவு அம்பேத்கர் அறிவிச்சுடர் விருது கவிதைப் போட்டி
சட்டத்தின்
தலைமகனே .....
சமத்துவத்தின்
தூதுவனே...
பாமர மக்களின்
நீதியை நிலை
நாட்டும் தர்மத்தின்
நீதிபதியே...
அறியாமை இருளை
போக்கும்
சட்டங்களின்
கலங்கரை விளக்கே...
ஏழை மக்கள்
உரிமைகளுக்கு குரல்
கொடுக்கும் நீதியின்
ஆளுமையின்
நாயகன் .....
அம்பேத்கர் அவர்களே...
என்றும் ஒலிக்கும்
உம் சட்ட புத்தகங்களின் ....
உரிமைக்கான நீதி ஓசைகள்.....
காலங்கள் கடந்தாலும் .....
மனிதம் காக்கும்
ஆயுதம்
உம் சட்ட புத்தகங்கள்....
உரிமை பூக்களை...
பேனா முனையில்
சட்டங்களாய்...
மலர செய்த பாரத
நாட்டின் நீதியின்
மைந்தனே...
சட்டத்தின் சமத்துவ புரட்சி வீரனே...
அம்பேத்கர் .....
உங்கள் புகழ்
உரிமைகளின் வெளிச்சமாய்.....
என்றும் மின்னிடும்....
ஜனநாயகம் ஜொலிக்கும் வரை....
D. ஹர்சிதா திருச்சி,
Comments (0)