காதல் கவிதை...! 006
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
காதல் கவிதை
தகப்பனாய் பாதுகாத்து தோழனாய் தோள்கொடுத்து
காதலனாய் இதயத்தில் இடம் பிடித்து
மணாளனாய் வாழ்வில் பங்கு கொள்ள
பல தடைகளை காதலின் நேசத்தால்
கடந்து இன்று மணவறை பந்தலில்
நம் குடும்பத்தினர்முன் உன்கை பற்றுகையில்
என்னுள்ளம் எல்லாம் பட்டாம்பூச்சி பறக்க
உலகை வென்ற திருப்தி அடைந்தேன்
உனக்குள் என்னை உயிராக மாற்ற
உன் கண்களை காணும் போது
என்னையே இழக்கிறேன் உன் இடத்தில்
அதுவே இப்பிறவி பாக்கியம் ஆகும்
உலகில் எத்தனையோ பேர் இருந்தும்
மனம் உன்னை மட்டுமே நாடியது
தேவைக்காக அல்ல வாழ்க்கை துணையாக
சிறுசிறு கருத்து வேறுபாடு உண்டு
ஆனால் உன்னை வேறாக பார்த்ததில்லை
உன்னை முதன் முதலாக கண்ட
அந்த நொடி எனக்கு தெரியவில்லை
நான் தான் நீ என்றும்
நீ தான் நாம் என்றும்
இந்த காதல் இப்பிறவிக்கு மட்டும்
இல்லாமல் ஏழேழு பிறப்பிலும் உன்னையே
கரம் பற்ற மனம் துடிக்கிறது
-பா.கீர்த்தனா,
Comments (0)