காதல் எனும் வேதம் ...! 007

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் எனும் வேதம் ...! 007

காதலர் தினம்

காதல் எனும் வேதம்
 
கண்டதும் ஒட்டி
கனத்தில் பற்றியது
வண்டாகத் துரத்தி
வசீகரித்து ஈர்த்ததே
 
இருமனம் கலந்த
இன்னுயிர் ஊடல்
பருவத்தின் தேடல்
பாசத்தின் நாடல்

வான் கொண்ட நிலவாய்
வடிவான கனாவாய்
தேன் சொட்டும்
தேகிட்டாத காதலே

உள்ளங்கள் பரிமாறி
உணர்வுகளின் சீண்டலில்
கஞ்சாப்பூ போதையில்
காந்தமாய் தாக்குமே

உயிரணுவின் தூண்டலில்
உதிரத்தின் ஓடலில்
உயிரன்பு கொய்தமையல்
உரமாக முளைக்குமே

வெட்டவெட்ட வளர்ந்திடும்
வேரரூக்க மண்ணோடு புதைந்திடும்
உண்மைக் காதல்
உயிர்துறந்தும் வாழுமே

எத்தனை மாண்டாலும்
எழிலாகத் தோன்றுமே
எத்தனை எதிர்ப்பிலும்
ஏணியாய் உயர்த்துமே

ஆதிமுதல் அரசன்வரை
அனைவரையும் வென்றது
பதியிலும் காவியத்திலும் பலமே பெற்றதே

காதல் எனும் வேதமே
காலத்தைக் கடந்ததே
மோதல் வந்தாலும்
மேவியே அகிலத்தில் உயிரோடு வாழுமே

கிருஷ் அபி இலங்கை