காதல்...! 037

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல்...! 037

காதல்

தோற்றுத்தான் போகிறது என் பிடிவாதம்..! உன் அன்பின் முன்..! சின்ன சின்ன ஊடல்களையும் நான் விரும்புகிறேன்..! பிரிவதற்கு அல்ல நம் காதலை வளர்ப்பதற்கு..! ஊடலிலும் உன் நினைவுதான்..! உன்னை சந்திக்கும் போதும் நான் என்னை விடுவிக்க முயல்கிறேன்..! உன் பார்வை பிடியிலிருந்து..! உன் நினைவுகளோடு பேசி பேசி ஊமை மொழியும் கற்றுக் கொண்டேன்..! நீ என்னோடு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் நொடியாக மறைகிறது..! நீ என்னோடு இல்லாத நாட்களை நான் கழிக்க ஒரு யுகமானது..! நான் தொலைவேன் என்று நினைத்தேன்..! உனக்குள் இப்படி தொலைவேன் என்று நினைக்கவில்லை..! உன்னை சந்திக்கும் முன் என் நண்பர்களை கதி..! உன்னை சந்தித்த பின் நீயே கதி..! இந்த நொடி இப்படியே நீண்டிட வேண்டும்..! என்னவளின் நினைவுகளோடு..! 

ஐ லவ் மை டியர் ..!

கவிஞர் சு. மகேந்திரன்.