ஆணவம்

புதுக் கவிதை

ஆணவம்

ஆணவம்..

ஆணவத்தில் அழிந்த
அசுரர்கள் அதிகமே//
இறைவன் அழித்தது
ஆணாவ குணமே//
பொறுமை மறைந்து
சிந்தனை குறைந்திட//
தீமையைச் செய்திட
துணையோடு நிற்க்குமே//
தவறுகள் உயர்ந்து
மரியாதை குறைந்திட//
வாழ்க்கையின் பாதை
தடுமாறிச் செல்லுமே//
நல்ல எண்ணங்கள்
பயணம் செய்திட//
ஆணவம் பாறையில்
மோது விழுந்திடுமே//
தீமையின் காற்று
அருகே வீசிட//
மனிதனின் ஆற்றல்
விழிக்காமல் உறங்கியதே//

இரா.சி.மோகனதாஸ்