உன் பெயர்

காதல் கவிதை

உன் பெயர்

தொடுதிரையால், துளிர் விடுகிறதோ! பழமை,,!

உன் பெயரை!
என் பேனாஎழுத, போதை கொள்ளுதடி !

உன் பெயர் உச்சரித்து மொழிந்து பார்க்க! என் இதழிலும் கள்ளூருதடி!!

கண்மணியே‌!நீ‌ கலைந்துவிட்ட ஓவியம் இல்லை! நீ

கண்டு ரசிக்க ! கவிதை படைக்க !
மீண்டும், மீண்டும் ,
பார்க்கத்துடிக்க! வைக்கும்,,!

 நெஞ்சில் அழியா!காவியம்!!
பல்லவர்கள் பார்க்காத சிற்ப மானாய்!!

லியணர்டோவின் மறையா! ஓவியமானாய்!!

கம்பனுக்கு கவிதை எழுத கருப்பொருளானாய்!!

வள்ளுவருக்கும்,
வான் உயர்குறளில்
இன்பத்து பாலில் கருவே ,,
நீ ஆனாய்!

ஆனால் எனக்கு மட்டும், 
இனிமை குறையா!
இனிதேன்
நட்பானாய்!

பிரியங்களுடன்
கவிதை மாணிக்கம்!