சுதந்திர கவி பாரதி...!
பாரதியார் பிறந்த நாள் கவிதை
(சுதந்திரமாயிருத்தலே
உயிரோடிருத்தல்
என்னும்முதல்பிரகடனத்தை
எழுதிய மகா கவியே
உனக்கே சமர்ப்பணம்)
எட்டயபுரத்தில்
ஒரு குட்டிச் சூரியன்
உதயமான நேரத்தில் தான்
தமிழ்த் தாயின் மார்பில்
பால் சுரந்தது
குழந்iதையை கொஞ்சியவர்கள்
இது அக்கினிக் குஞ்சு
என்றார்கள்
பத்து நூற்றாண்டுகளின்
உறக்கத்தை கலைக்க வந்த
மாபெரும் இடியோசை அது
இருள் குட்டையென தேங்கிக் கிடந்த
ஒரு கருப்பு பிரதேசத்தில்
வெளிச்சத்தை பீய்ச்சியடித்த
மாபெரும்நீருற்று அது
அடிiமைமோகத்தில்
தன்னை விற்றுக்கொண்ட
மனசுகளை
விடுதலை வேள்வியில்
ஆகுதியாக்கிய விரல்கள்
அது
பூக்களுக்குள் சாதிவளர்த்த
ஒரு பாழடைந்த பிரதேசத்தில்
காக்கை குருவி எங்கள் சாதி
என்று
எக்களித்த பிரபஞ்சத்தின் குரல் அது
பூணுால்களில் சாதி வளர்த்த
ஒரு புராண சமூகத்தில்
ஒருதோழனுக்கு
ஒரு புணுால் மாட்டி
சாதியழித்த
சம்மட்டியின்
அடையாளம் அது
சுதந்திரமாயிருத்தலே
உயிரோடிருத்தல்
என்னும்முதல்பிரகடனத்தை
எழுதியவீரியவிரல்கள்அது
ரஷ்யப்புரட்சிக்குசிவப்புகம்பளவரவேற்பு
கொடுத்த மனதது
பீஜீத்தீவீலே கரும்புவெட்டும் தமிழர்களுக்கு
கண்ணீர் சிந்திய கருணை அது
சேதுசமுத்திரத்திற்குபாதைஅமைத்த
மகாகனவு அது
எட்டுத் திக்கும் பறந்துசென்று
கலைச் செல்வங்கள்
கொண்டு வந்து சேர்த்த
உழைப்பின் சிறகுள் அது
வயிற்றுப்பசிக்கு செல்லம்மாள்
வைத்திருந்த
கைப்பிடி அரிசியை
காக்கை குருவிகளுக்கு
வாரியிறைத்த
கவிமனதது
வார்த்தைக்கும்வாழ்க்கைக்கும்
இடைவெளியில்லாத
இதயமது
கரியமில வாயு நிறைந்திருந்த
இலக்கியப் பிரதேசத்தில்
சுத்த ஆக்ஸிஸன்
பாய்ச்சிய
புதுப்புனல்அது
சொல்புதிதாய்பொருள்புதிதாய்
சோதிமிக்கநவகவிதை
செய்த பெரும் படைப்பது
ஒருஒற்றைச்சொல்தான்அது
ஆனால்
ஒருயுகத்தின்கவிதையை
குறிக்கும்சொல்அது
என்றும்எரியும்எரிதழல்அது
இந்தக் கவிதையை இப்பொழுதும்
எழுதிக்கொண்டிருக்கும் சொல் அது
அந்தஒரு சொல்லேபாரதி என்பது
- தங்கேஸ்
Comments (0)