ஏற்றமிகு எட்டயபுரத்து கவிஞன் பாரதி...!

பாரதியார் பிறந்தநாள் கவிதை

ஏற்றமிகு எட்டயபுரத்து கவிஞன் பாரதி...!

எட்டயபுரத்து ஏற்றமிகு கவிஞர்
பாரதிக்கு பிறந்நநாள்!

ஏடுகொண்டு! எழுத்தாணிகொண்டு!

பாரதத்திற்கு எழுச்சியூட்டிய பாமகன்!

வீறு கொண்டு! விவேகமுடன் !
வீர சிறுவர் முதல் இளைஞர் வரை! விடுதலை வேட்கைத்தீபரவி விட்டவன்!

அன்னியருக்கு தலை வணங்க மறுத்த முண்டாசு கவிஞன்!

காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி என !சாதியை வேறருக்க !கவிதை படைத்தவன்!

செப்புமொழி பதினெட்டிலும் தமிழை உயிராய் நேசித்தவன்!

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒப்பற்ற கவிஞன்! பாரதியின் பிறந்தநாள்!

வணங்கி வாழ்த்தி துதிப்போம்!

-கவிதை மாணிக்கம்