பாரெங்கும் பாரதி...! 024
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பாரெங்கும் பாரதியே ...
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற பெருங்கவிஞன்..!
இப்பாரதம் கண்ட பாவலன்..!
செப்புக் கம்பியில்
பாயும் மின்சாரத்தை..!
செந்தமிழ் சொற்களில் பாய்ச்சியவன்..!
சாதியினை ஒழிக்க
வீதிவீதியாய் பாடல் பாடினார்..!
சுதந்திர தாகம்
சுதேசி தீர்க்குமென தீட்டினார்.!
அவன் ;
அரசவை கவிஞன்.! மட்டுமல்ல ;
அறுசுவை கவிஞனும் கூட..!
அவனின் ;
வெண்ணிற முண்டாசு
வெள்ளிப் பனிமலை !
கண்கள் இரண்டும்
கங்கை , யமுனை !
முறுக்கிய மீசை
விந்திய மலை தொடர் !
விரிந்த மார்பே
வளமார் திராவிடம்..!
ஆம் ;
பாரதம் தானே பாரதி..!
பாரதி தானே பாரதம்..!
கவிஞர் கு அழகர்சாமி ;
2/151; சுந்தரவள்ளி அம்மன் கோவில் தெரு ;
கமுதக்குடி ஊராட்சி;
பரமக்குடி நகராட்சி;
இராமநாதபுரம் மாவட்டம் (623608);
Comments (0)