என் தூவல் துணைவன் பாரதி... ! 074
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
என் தூவல் துணைவன் பாரதி
புரட்சி படைத்திடும் கவி வடித்திட
துணையாகும் சுதந்திரத் தூவல்!
மாட்சி தந்திடும் சுந்திரத் தமிழில்
கற்பனைத் தூரிகைத் தோய்த்தெழுதிடச் செய்திடுவான்!
வேணுகானமாய் இனித்திடும் புதுக்கவிதைக்கு
வேய்குழலோனாய் வந்திடுவான்!
வேண்டியதற்கு வேள்வி செய்திட
மரபுத் துணையாவான்!
ஊரார்க்கு உதவிட உற்றவரோடு மகிழ்ந்திட
அணி திரட்டிடும்படி அணியிலக்கணமாவான்!
கள்ளூறும் எண்ணம் மேலோங்க
கண்ணம்மாவின் காதலனாவான்!
விடுதலைக்கும் புதுமைக்கு வித்திடவும்
புதுமைப் புலவனாகிடுவான்!
வானளாவியக் கனவும் மெய்ப்பட வேண்டினால்
மகாகவியே துணைக்கழைக்க காவியமாய் ஒளிர்ந்திடுவான்!
- ச.லெட்சுமி லிங்கம்
திருநெல்வேலி.
Comments (0)