அறிவு வெளிச்சம் அம்பேத்கர் 006

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவு வெளிச்சம் அம்பேத்கர் 006

அறிவு வெளிச்சம் அம்பேத்கர்
*************
வறுமை குடும்பம் எல்லாவற்றையும் கடந்து
வெளி நாட்டில் கல்வி பயின்ற மாமேதை/
அம்பேத்கர் அறிவுச் சுரங்கம்/
அறியாமைக்கு எதிராக ஆற்றிய பணிகள் 
சான்றோர் நெஞ்சில்
நிலைக்கச் செய்ததே/
பகுத்தறிவுச் செம்மல் ஆராய்ச்சியின் சிகரம்
மக்களின் மாபெரும் வழிக்காட்டி/
பகுத்தறிவுத் துறையில்
அவருக்கு இணை அவரே/
பதினெட்டு மணி நேரம் ஒரே நாளில் கல்வி கற்க செலவிட்ட மாமேதை/
மனித உரிமைக்காக எடுத்துக் கொண்ட முயற்சி எண்ணற்றவை/
மக்களால் நடத்தப்படும் மக்களாட்சியை விரும்பியவர்/
அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும்
ஊமைகளின் உறுப்பினராக பேசத் தொடங்கியவர்/
இவ்வுரிமைக் குரல்  வட்ட மேஜை மாநாட்டில் வழியே உலக அரங்கில் எதிரொலித்தது/
அறியாமை அனைத்திற்கும் மூலக்காரணமே/
ஒவ்வொருவரும் முழு மனித நிலையை அடைய
கல்வி செல்வம் உழைப்பு மூன்றும் தேவையே/
மாணவனுக்கு கல்வி தகவலை திணிப்பதாக
இருக்கக் கூடாதே/
ஊக்கத்தைத் தூண்டி தனித் திறமையை வெளியே கொண்டு வர வேண்டுமே,/
இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக் கதிரே/
சாதி களையப்பட வேண்டிய களை என்றாரே/
சனநாயகத்தின் மறுபெயர்  சகோதரத்துவம்
சுதந்திரம் என்பது சுயேச்சையாக நடமாடும் உரிமை/
உயிரையும் உரிமையும் பாதுகாக்கும் உரிமை அது/
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில்
எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவமே/
சமத்துவத்தின் மறுபெயர் மனித நேயம்
சமத்துவம் மறுக்கப்படும் போது
மனிதப் பண்பு மறைந்து விட்டதே உணர்த்தியவர்/
மனித உரிமைக்காக உழைத்தவர்/
சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதி புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்து அவர்/
சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்/
இவரைப் போல ஒப்பற்ற தலைவரை இனி காண்பது அரிதே/
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்
.

.