பல்துறை வித்தகர் அம்பேத்கர் 005
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
பல்துறை வித்தகர் அம்பேத்கார்
பொருளாதார துறையில் பட்டொளி வீசியவர்//
அரசியலில் ஆயிரம் அரிமாக்களாய் விளங்கியவர்//
தவமின்றி கிடைத்த வரமான தத்துவத்தார்//
வரலாற்றுத் துறையில் சரித்திரம் படைத்தவர்//
சத்தம் இல்லாமல் சட்டம் வகுத்தவர்//
உதிக்கும் செங்கதிராய் ஆசிரியராய் ஒளிர்ந்தவர்//
இதயங்களை கவர்ந்த இதழாளராக இணைந்தவர்//
எல்லோரும் விரும்பும் எழுத்தாளராக வாழ்ந்தவர் //
தட்டிக் கேட்பதில் பூகம்ப புரட்சியாளர் //
பட்டியல் சாதி மக்களுக்காக பகலவனாயிருந்தவர்//
தீஞ்சுடராய் இருந்து தீண்டாமைக்காக போராடியவர்//
மிகச்சிறந்த இந்தியராக தேர்வான தேனமுதர்//
முதலாவது சட்ட அமைச்சரான அம்பேத்கார்//
உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற//
முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்//
இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வரைந்து//
திருவூலமாக நம் இதயத்தில் வாழ்பவர்//
- இசைப்பேரரசி
லதா சங்கரன்
சென்னை
Comments (0)