உலக சிரிப்பு தினம்

சிரிப்பு தினம் கவிதை

உலக சிரிப்பு தினம்

"உலக சிரிப்பு தினம்"

 உள்ளங்கள் அழுதாலும் உன் உதடுகள் சிரிக்கட்டும் !!  
 உன்னை குத்த வரும் கூர் வாளும் முனைமழுங்கி போகட்டும் !!

வாய்விட்டு சிரிக்க நோய் விட்டுப் போகுமாம் சிரிப்பு! அழகாய் விரிக்கும் பூவும் !
அழகாய்மனம்விட்டு சிரிக்கும்பெண்பூவும் ஒன்றுதானே !!

பிறர் சோகம் தீர்க்கும் அருமருந்தாம் சிரிப்பு! பிறர் கோபம் கலைக்கும் இனிய விருந்தாம் சிரிப்பு!!

 வாட்டும் வறுமையிலும் வாடாத உன் பொன் சிரிப்பு !!
கூட்டும் குடும்பத்தையே!உந்தன்புன்சிரிப்பூ!

 கணவன் மனைவி தம்மில்  ஊடல்கலைக்குமாம் புன்சிரிப்பு!

 நீதியிலும், நேர்மையிலும்! பூத்துகலந்திருக்குமாம் பொன் சிரிப்பு!! அழுகையை ஆனந்தப்படுத்தும் ஆயுதம் சிரிப்பு!!

 உலகெங்கும் மொழிபெயர்க்க முடியாதது ! அவரவர் தாய் மொழியிலே சிரிக்க முடியாதது சிரிப்பு! 
உலகத்திற்கே!! பொதுவானது! சிந்தித்து சிரித்திருப்போம்!!  
சீர்பட சிரித்துசேர்ந்து மகிழ்ந்திருப்போம்!!

பிறரைகண்டு! ஏளனமாய்" சிரிக்கமறந்திருப்போம்! அனைவருக்கும் உலக சிரிப்பு தினம் வாழ்த்துக்களைபகிர்ந்திருப்போம்!

-உங்கள் நண்பன் கவிதை மாணிக்கம்