பாரதியார்...! 073
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பாரதியார்
தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை!
முண்டாசு மூத்தப் பிள்ளை!
முறுக்குமீசை முத்துப்பிள்ளை!
எட்டயபுரத்து எழுத்துக்கவி !
இந்தியாவின் புரட்சிக்கவி!
சிந்து பாடிய சுந்தரக்கவி!
பள்ளு பாடிய பாரதக் கவி!
அறம் அறிந்த அறிஞர்!
மறம் தெரிந்த மறவர்!
தனிமனித உரிமையை உரைத்த வீரகவி !
பெண்ணுரிமை பாடிய புரட்சிக்கவி!
சுதந்திர தாகத்தை சுட்டிக்காட்டிய சுந்தரக்கவி!
தேசம் போற்றும் தேசியக்கவி!.
*வீழ்வேன் என்று நினைத்தாயோ* என்றீர்....
வீழாமல் காப்போம்
நின்
வரிகளை...! வழிகளை...!
என்றும் என்றென்றும்....!
கரம் தூக்கி
சிரம் தொட்டு
தினம்
வாசிப்போம்...
சுவாசிப்போம்...
நின்
கவியை....
*என்றும் அணையா தீ*
*எங்கள் மகாகவி பாரதி(தீ)*...
- ஹேமலதா லட்சுமிபதி, 12.ரெட்டிப்பேட்டை.
காஞ்சிபுரம்.631501
Comments (0)