பெண்ணுள் பஞ்சபூதம்
மகளீர் தினம் கவிதை
பெண்ணுள் பஞ்சபூதம்
ஈரமான இதயத்தோடு
கருணை மழையாய்
தன்னலமில்லா பணி புரியும்
இல்லத்தரச்சியாய்,
கம்பீரமாய் வலம் வருவதில்
*நீராக!*
பொறுமையின் சிகரமாய்
பூமா தேவியாய்
தாயென உயிர் சுமப்பதில்,
பாசம் சொரிவதில்
தங்கையாய்/தமக்கையாய்,
பரஸ்பர உணர்வு நிகழ்வுகளில் பகிர்தலுடனான தோழியாய் ,
நேசம் செலுத்துதலில்
மனைவியாய்,
அன்பை புரிதலில் மகளாய் பரிணமிப்பதில்
*நிலமாக!*
வழிபாடு செய்யும்
தீப ஒளியாய்/திவ்ய ஒளியாய்,
பணம் புழக்கமாகும் மகாலட்சுமியாக, அறுசுவை சமைக்க
அடுப்பில் நெருப்பென ஆகும்
பெரும் சக்தியாய் பரிணமிப்பதில் *நெருப்பாக!*
குடும்பத்தின்
ஆக்சிஜன் சிலிண்டர் ஆக,
இக்கட்டு நேரத்தில்
குளிர் தென்றலாக,
மனதை/உடலை வருடும்
இளந்தென்றலாக,
பெண்மை மிளிர்வதில்
*காற்றாக!*
விட்டுக் கொடுப்பதிலும், விருந்தோம்பலிலும்,
பூசல் தவிர்த்து அரவணைப்பதிலும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும்
தன் மனதில் அன்பை பகிர்ந்து புகலிடம் தருவதிலும்,
*ஆகாயமாக!*
பெண்ணே!
அனைத்திலும்
இல்லை ...இல்லை
உன்னுள்
பஞ்சபூதங்களும் அடக்கமே!
முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன்
வாலாஜாபேட்டை.
Comments (0)