புத்தாண்டே வருக..! வளங்கள் பெருக..!
புத்தாண்டு கவிதை
புத்தாண்டே வருக, வளங்கள் பெருக...!
*பெருகிடும்* *வல்லமையை,*
*நித்தமும் தருக...!*
*தருகின்ற அமைதியோ,*
*தரணியில் நிலைத்திட...!*
*நிலைக்கின்ற நிம்மதியை,*
*நீயாகவே வழங்கிடு...!*
*வழங்கிடுவாய்*
*புதிய நல்ல*
*வாய்ப்புக்களை...!*
*வாய்ப்புகள் கைமீறாமல்,*
*காத்தருள் செய்திடு...!*
*செய்கின்ற செயலுக்கு,*
*ஆற்றலையே*
*அள்ளிக்கொடு...!*
*கொடுக்கின்ற நிலையினை,*
*அனைவருக்குமே*
*வரமாக்கிடு...!*
*வரமாக்கிய வளங்களை,*
*அபரிதமாய்*
*பெருக்கிடு...!*
*பெருகுகின்ற*
*மகத்துவத்தை,*
*பாங்காய் விதைத்திடு...!*
*விதைத்திட்ட பண்பாட்டை,*
*விழாமல் பாதுகாத்திடு...!*
*பாதுகாத்த*
*கலாச்சாரத்தை,*
*பக்குவமாய்*
*மீட்டெடு...!*
*மீட்டெடுத்த தமிழுணர்வை,*
*தயங்காமல் அவையேற்றிடு...!*
*அவையேற்றி அடியாளை ,*
*வையகத்தில் ஆளாக்கிடு...!*
*ஆளாக்கிடும் சூழ்நிலையை,*
*அனுதினமும்*
*உருவாக்கிடு...!*
*உருவாக்கியே*
*எம்மை,* *உயர்ந்திடவே*
*வாழ்த்திடு...!*
*வாழ்த்தி* *நல்ஆசியினை,*
*வாரியே வழங்கிடு...!*
*வழங்கிட*
*வருகின்ற,*
*வரலாற்று*
*நாயகியே...!*
*நாயகியே*
*இலக்கினை,*
*வென்றெடுக்க*
*விரும்பிவிடு...!*
*விரும்பிய*
*ஏக்கத்தை,*
*வீணாகாமல்*
*அடையவிடு...!*
*அடையவிடும்*
*பாக்கியத்தை,*
*அருளுகின்ற*
*புத்தாண்டே...!*
*புத்தாண்டே*
*உம்மை,*
*வணங்கியே*
*வரவேற்கின்றேன்...!*
*அன்பிற்கினிய எனது அனைத்து நல் உறவுகளுக்கும்...*
*ஆத்மார்த்தமான இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!*
-முனைவர் ம.ப.சாந்தி சங்கரி, புதுச்சேரி.
Comments (0)