திருக்கார்த்திகை திருவிழா
திருக்கார்த்திகை திருவிழா கவிதை
கார்த்திகைத் தீபத்திருநாள்
ஏற்றும் தீபத்தால்
ஏற்றங்கள் பிறக்கட்டும்
மாற்றங்கள் மாறி
மனங்களும் மகிழட்டும்
தீபங்கள் ஒளிர
தீமைகள் ஒழியட்டும்
வன்மங்கள் அகன்று
வசந்தங்கள் பிறக்கட்டும்
மனிதங்கள் வளர்ந்து
மனிதநேயம் போற்றட்டும்
புனிதமான வாழ்க்கை
புத்தொளி கொடுக்கட்டும்
இரக்கமும் ஈகையும்
இளையோரிடமும் இருக்கட்டும்
மறக்காத மனங்களோடு
மகத்துவம் படைக்கட்டும்
அகிலமும் அன்பை
விதையாய் விதைக்கட்டும்
முகிலாகப் பரவும்
வான்போல வான் மழை கொடுக்கட்டும்
பக்தியில் பரமனைப் போற்றிப்
புகழ் பாடட்டும்
- கிருஷ் அபி, இலங்கை.
Comments (0)