கணவனின் பிரிவு
புதுக்கவிதை
கணவனின் பிரிவு!
தனிமையில் தவிக்க விட்டு!
தரணி கடந்து போனாயோ!
வெறுமையாய் விரதம் இருந்த நாட்கள் பல!
வெறுத்தே,,! போனாலும் ,கூடிய நாட்கள் சில,,!
நினைவாய் வந்து நிற்கிறதே !
நினைக்க நெஞ்சம் நீங்கா வேதனை தருகிறதே!
சிரித்துப் பேசிய நாட்களெல்லாம்,,! சிதறி வெடித்த பட்டாசு தீப்பொறியாய் சிதறுகிறதே!
பட்டாசை விட படபடவென!
பாவி நெஞ்சம் அடிக்கிறதே! கூடிய நாட்களை, நினைத்துப் பார்த்து தவிக்க,,,!
மூட்டிய தீயாய் சுடுகிறதே!
முழு இரவும்
முழு பகலாய் ஆகி காய்கிறதே!
கவிதை மாணிக்கம்.
Comments (0)