அறிஞர் அண்ணா...! 036
அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி
அறிஞர் அண்ணா
பட்டு நெசவுக்குப் புகழ் பெற்ற
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த
நடராசன், பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு
குட்டி கண்ணன் .
பாரதத்தாயின் தலைமகன்
பெரியாரின் படைத்தளபதி
காஞ்சிபுரம் தந்த தங்கத்தலைவன்
மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்
கடமை கண்ணியம் கட்டுபாடு இம் மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தவர்
• முதலமைச்சராக மட்டுமன்றி,
• ஒரு அறிஞராகவும்,
• சமூக சீர்திருத்த வாதியாகவும்,
• ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும்,
• மிகச் சிறந்த பேச்சாளராகவும்,
• இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். என்றெல்லாம் புகழுக்கு உரியவர் எல்லோரும் செல்லும் வழியில்
நீ போகாதே
உனக்கான வழியை நீ தேடு*.
என்ற வரிக்கு சொந்தக்காரர் "வெற்றி பெற நினைப்பவனுக்கு
வானம் கூட வாசல் படி தான்"
அதன் படி வாழ்ந்து காட்டியவர்
மூன்று எழுத்துக்கு உரிமையாளர் .
வெற்றியோ,தோல்வியோ
கடமையை செய்வோம்
யார் பாராட்டினாலும் ,
பாராட்டாவிட்டாலும்
கவலை வேண்டாம் என்று
நம் நாட்டுக்கும் நமக்கும்
பல நல்ல
வாழ்க்கை நலத்திட்டங்களை
செயல்பாட்டுக்கு கொண்டு வர
பெரும் பங்கு வகித்தவர்.
நம் “அறிஞர் அண்ணா "
- திருமதி .ராஜலட்சுமி,
இராஜபாளையம்.
Comments (0)