அண்ணா என்னும் ஆகாயம் ...! 034
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை
அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்....
அறிஞர் அண்ணா
என்னும் ஆகாயம்....
அனைவரும் தொடரும்
பயிற்சி பட்டறை...
நினைத்தாலே இனிக்கும்;
நினைவுகள் சுவைக்கும்...
பெருமை செயல்கள்;
தமிழனின் ஏட்டில்...
தமிழ்நாடு மாற்றம்;
திட்டங்கள் ஏற்றமே...
எளியவர் வாழ்வில்
உயர்வு ;அவரால்...
எத்தனை யெத்தனை
நெறிமுறை நடப்பினில்...
வறியவர் உழைப்பின்
மேன்மை பகிர்தல்....
கடைக்கோடி மனிதனும்
பயன்பெறல் வழிகாட்டல்...
விடையாகும் தமிழன்
தலைநிமிர நடைமுறை...
எவரையும் மதித்தல்;
பண்பாடு காத்தலே...
சொல்லுடன் செயலும்
நடப்பினில் தனிப்பாதை...
நலந்தரும் ஆட்சியது
நாட்டவர் விரும்பியது...
அடிப்படை வசதிகள்
எப்போதும் தொடராகும்....
சொல்லின் செல்வர்;
எழுத்தினில் சிறப்பே...
எளிமை,கடமை,
கண்ணியம்; கட்டுப்பாடே...
யாவர்க்கும் அண்ணா
கற்றவர்சபை பேரறிஞர்...
தனித்திறன் மேலோங்கும்;
எதிரியும் மலைப்பர்...
சொற்போர் வல்லவர்
அனைவர்க்கும் நல்லவர்...
திண்மையது கொண்ட
கொள்கை நடப்பினில்....
- சா.சையத் முகமது
கிருட்டிணகிரி.
Comments (0)