தித்திக்கும் தீபாவளி
தீபாவளி கவிதை
தித்திக்கும் தீபாவளி
சாதிமத வேறுபாட்டை வேரோடு அழித்து//
சொந்த பந்தங்களின் இனிமையான அன்பு உரையாடல்களுடன்//
கங்கா ஸ்நானம் ஆயிற்றா என//
ஒருவருக்கொருவர் பண்போடும் பழமையோடும் கேட்டு//
தீபங்கள் ஏற்றி இருளினை நீக்கி//
சமூகவலைத்தளத்திலும் அலைபேசியிலும் வாழ்த்து பரிமாற்றங்களுடன்//
இனிப்புக்களுடன் இனிதே தொடங்கும் தீபாவளி//
மழலைகளில் இருந்து பெரியோர் வரை//
புத்தாடையணிந்து குதூகலத்துடன் தொடங்கும் தீபாவளி//
நம் விரல்கள் தீண்டி
சரவெடியும் //
அழகாய் பாடும் சப்த ஸ்வரங்களுடன்//
ஈர்க்கும் லக்க லக்க லக்ஷ்மி வெடியுடன்//
பூத்துக் குலுங்கும் பூந்தோட்ட புஸ்வானதுடனும்//
புன்னகை பூத்துச் சிரிக்கும்
கம்பிமத்தாப்புகளுடனும்//
ராரா பாட்டு பாடு/
ராக்கெட் களுடனும்//
மகிழ்ச்சி மத்தாப்போடு சங்கீத சரவெடிகளுடன்//
ராத்திரியில் பூத்திரியேற்றி பகலாக்கி//
வானில் சிதறும் வண்ண வெடிகளுடன்//
இல்லாதவர்களுக்கு ஈன்று இன்பத்தோடு தொடங்கி//
வேற்றுமையில் ஒற்றுமையாய் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையுமிணைத்து //
அனைத்து இந்தியரும் ஒன்றாய் இணைந்து//
ராம் , ரஹீம் , சைமன் கைக்கோர்த்து
தொடர்ந்துக் கொண்டாடும் தீபாவளி திருநாளாம்//
லதா சங்கரன்
சென்னை
Comments (0)