வீர தமிழன்...! 063
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
வீர தமிழன்...
வீரத்தமிழன் மகாகவி பாரதியாரை
வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
தமிழ் கவியால் வீரத்தை தமிழனுக்கு
உணவாக ஊட்டி கவி பாடியவர்
விடுதலைப் பற்றி விழிப்புணர்வை
தன் விவேக கவியால் விளக்கியவன்
தாழ்வு மனப்பான்மையை தமிழனிடத்தில் விளக்கி விட்டவன்
கனவு காண் கண்டதை மெய்ப்பட செய்ய என்றவன்
பெண் விடுதலைக்காக வீர கவி பாடியவன்
ஓடி விளையாடு பாப்பா என்று பெண் கல்வியை ஊக்குவித்தவன்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று தீண்டாமையை அறவே வெறுத்தவன்
விவேக கவி பாடிய
மறுமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய இழுத்தோனி
உன் பிறப்பு தமிழனின் தலையெழுத்தை மாற்றியது
உன்னை மனிதனாக பார்க்கிறேன்
உன்னில் தெய்வம் தோன்றுதே
இறப்பு என்பதே உனக்கு இல்லை
இன்றும் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் தமிழ்மண்ணில்
என்னிலும் நீ வாழ தொடங்கி விட்டாய் மெல்ல மெல்ல வளர தொடங்கியது உன் வீர கவி
வீர தமிழனே விவேக கவிஞனே வீர வணக்கம் வைத்து உன் கவிக்கு முத்தமிட்டு வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.
- த வெண்மதி வசந்தி
நம்பர்: 9 :A L R பிரியங்கா காம்ப்ளக்ஸ்
வடக்குத்து
இந்தியன் பேங்க் அருகில்
வடகுத்து போஸ்ட்
நெய்வேலி 607308
Comments (0)