உன் விழிகள்...!
உன் விழிகள் காதல் கவிதை
வரவழைக்கும் விழிகள் ரெண்டும்!
வான்வில்லென புருவம்இரண்டும்!
பூத்திருக்கும் இடையில் கருநிற சிறுநிலவென குத்துபொட்டுஒன்றும்!!
கொத்தும் கிளியென மூக்கொன்றும்!
கொஞ்சிமொழிபேசா
மௌனம் ஒன்றும்!
தேன்சுமந்த இதழ் இரண்டும்!
குருநகை முகம்காட்டும்
அங்கம்!!
குத்து பொட்டுடொன்று
நாடியில்! நான் தீண்டாத போதும்!
தென்றல் தீண்டிட
எனக்குபகையாகி போனதே!
தலைவியின்
முகம் காண!
போரில் பல யானை வென்ற வீரனும்!
உன்னிடம் தோற்றது!
சாதனை சரித்திரமே!
நான் எம்மாத்திரம்!
குத்தும் வாளைவிட
கூர்மை !
உன் விழிகளுக்கு உண்டு அந்த அந்தரங்க தன்மை!!
குலப்பெண்களிலே
உன் அழகோ! மேன்மை!
கவிதை மாணிக்கம்
Comments (0)