அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்...! 044
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி
அறிஞர் அண்ணா
என்னும் ஆகாயம்...!
கண்ணாடி
அணிந்தவராம்
கலைஞருக்கு
மூத்தவராம் //
காஞ்சியிலே
பிறந்துவிட்ட
தென்னாட்டு
காந்தியாம் //
பல்துறை
வித்தகராம்
பேச்சுக்கலையின்
நாயகராம் //
பேரறிஞர்
என்றே
புகழ்ந்திடுவார்
எல்லோரும் //
இருமொழிப் புலமைப்
பெற்ற
எழுத்தாளர் //
எழுதுகோல்
பிடிக்கும்
சொல்லின்
செல்வர் //
ஒன்றே
குலம்என்றார்
தேவனும்
ஒன்றென்றார் //
ஏழையின்
சிரிப்பிலே
இறைவனைக்
கண்டார் //
அலைபாயும்
கடலோரம்
அமைதியாய்
உறங்குகின்றார் //
கடமை கண்ணியம்
கட்டுப்பாட்டின்
உருவமாம் //
அறிஞர் அண்ணா
என்னும் ஆகாயம் //
இருந்திடுமே
தமிழ்கூறும்
நல்லுலகம்
உள்ளவரை //
- கவிஞர் ப. குமரகுரு
நாகப்பட்டினம்
Comments (0)