மகிழ்ச்சி FM நான்காம் ஆண்டு வாழ்த்து கவிதை

மகிழ்ச்சி Fm ஆண்டு விழா கவிதை

மகிழ்ச்சி FM நான்காம் ஆண்டு வாழ்த்து கவிதை

மகிழ்ச்சியோடு மகிழ்ந்திருங்கள்.. 

இயல் இசை நாடகமெனும்
முப்பெரும் கலைகளின் ஊற்று.. 
உண்ணும் போதும் உறங்கும் போதும்
உடனிருக்கும் 
அழகிய பாடல்களின் அணிவகுப்பு..

செவி வழியே இன்னிசை எனும்
தேன் பாய்ச்சும் இன்பச் சுரங்கம்..
அரிய தகவல்களை 
அள்ளியள்ளித் தரும்
அழகிய பொக்கிஷம்...

இன்னிசையை அள்ளிப்பருக 
ஆவலைத் தூண்டும்
வானொலியின் நாயகன்...
இணையத்தின் வழியே 
இதயத்தினை இசையால் நிரப்பிடும்
இன்னிசை ஊற்று.. 

கவிதையோடு கானங்களும்
இயலோடு இசையும் இணைந்து
நம் வாழ்வோடு இயல்பாக
கலந்திடும் பண்பலை...

பக்தி பரவசத்தோடு நாளினை துவங்கி
வாழ்த்துக்களோடு வளம் சேர்க்கும் நிகழ்ச்சிகள்... 
அறுசுவையோடு அழகு குறிப்புகளும் 
அழகியலாய் இயம்பிடும் திறன்.. 

சிறுவர்களுக்கான 
சிறப்பான கதைக்களம்
சிலுசிலுவென்று 
ஊர் சுற்றிப் பார்க்கும் அதிசயம்...

மனதின் கவலை போக்கும் கதைகள்
எண்ணற்ற 
சிறப்பு நிகழ்ச்சிகளின் சிம்மாசனம்...
எப்பொழுதும் மனதினை 
மகிழ்ச்சியோடு வைத்திருக்கும்
மகிழ்ச்சி பண்பலை... 
பல்லாண்டு பல்லாண்டு
வாழிய வாழியவே... 

Rj சசிகலா திருமால்
மகிழ்ச்சி பண்பலை.

 

இசை பயணத்தின் ஒரு மணி மகுடம் மகிழ்ச்சி பன்பலை...

தனக்கென்று ஒரு அடையாளத்தைத் தேடியவன்

தரணியில் தனது பாடல்கள் மூலம் மகிழ்ச்சியை தந்தவன்

தன்னால் முடியும் என்று சாதனைகளை செய்திருப்பவன்

தன்னால் பல கவிஞர்களை
உருவாக்கியவன்

தனக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறியவன்

தலைவனாக நின்று விருதுகளை வழங்கியவன்

தன்னுடைய பதிப்பகத்தில் நூல்களை  வெளியிடுபவன்

தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு கற்றுக் 
கொடுப்பவன்

தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியவன்

தன்னால் முடிந்த
 சேவைகளை செய்வதற்கு காத்திருப்பவன்

தன்னலம் கருதாத ஒரு சேவகன் மகிழ்ச்சி FM 

கவிஞர் சைலஜா கணேசன்,

கோவில்பட்டி.