பார் போற்றும் பாரதி...002
தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி
பார் போற்றும் பாரதி
கவிதை/கட்டுரை/பாட்டுக்கள் உரைத்த
வித்தகனான எட்டாவது அதிசயம்!
வெற்றுக் கவிஞனாக இல்லாமல்
தமிழ் பற்றுக் கவிஞனானவன்!
பெயரை உச்சரிக்கையில் சிலிர்த்த
உள்ளம் தரும் புரட்சிப் பாவலன்!
புதுநெறி நிறைந்த பாட்டுத் தேரேறி
பாரெல்லாம் பயணித்த சாரதி!
அச்சமென்பது அணுவளவும் இல்லாத,
கவிதையெனில் நினைவாகும் மறவன்!
வாழ்ந்த காலம் கொஞ்சமாயினும்
படைத்ததில் தரணி மிஞ்சுபவன்!
சுதந்திர வேட்கை கவிதைகள் வடித்து,
விடுதலை நம்பிக்கை நாற்று நட்டவன்!
இதய திடம்/ வேட்கை மனம் கொண்டு,
வெள்ளையன் ஆதிக்கம் எதிர்த்தவன்!
நிலத்தில் யார்க்கும் அஞ்சாது
தமிழ்மொழிக்கு தனித்துவம் ஈந்தவன்!
பாமாலை/புகழ்மாலை சாற்றியே
தமிழன்னை மகிழ்வுறக் களித்தவன்!
பாரதி போல் இயற்கையை ரசித்து
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென
பிரதிபலிக்க விரும்பும் மனிதனுள்ளே
காணலாம் பார் போற்றும் பாரதியை!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை...632513
Comments (0)