அண்ணா என்னும் ஆகாயம் ...! 030.

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும் ஆகாயம் ...! 030.

தலைப்பு:அண்ணா என்னும் ஆகாயம் 

காஞ்சிபுரத்தில் பிறந்த நடராசன் அண்ணாதுரை//
மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும்//
தமிழகத்தின் முதலாவது முதலமைச்சரும் அவர் //
சமூகநீதி மாநிலஉரிமை 
மொழிஉரிமை சிந்தனையாளர்// சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படைத்தவர்//
எல்லா ஊடகங்களையும் 
தன்கையில் எடுத்தவர்//
புதிய தோற்றமும் உள்ளடக்கமும் தந்தவர் //
திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் //
தமிழின் மீது தாக்கம் அளப்பரியது// தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் இடத்துக்கு //
தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டியவர் //
தமிழர்களை தனித்த தேசியயினம் ஆக்கியவர்// 
ஒரு பண்பாட்டில் குறியீட்டு இவர்// சமூக பாகுபாடுகளை அகற்ற பாடுபட்டவர்//
ஒன்றே குலம் ஒருவனே தேவன்// என்ற சமரசக் கொள்கை வெளியிட்டவர்//
மேடைப் பேச்சிலும் செந்தமிழை கொண்டுவந்தவர் //
திராவிட அரசியலுக்கு கொடையாக கிடைத்தவர்//
இவரது புகழ் பார்உள்ளவரையும் ஓங்குக //

த.ஹேமலதா
நாகர்கோவில்