தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா..! 029

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி

தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா..!  029

தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா...

காஞ்சிபுரம் தந்த தனிப்பெரும் தலைவன்⸴ 
சாமானிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்,
ஓர் அரசியல் தலைவர், 
ஓர் அறிவுலக மேதை.

 பேச்சிலே...
எளிமை, இனிமை, 
கருத்துச் செறிவு,
அடுக்கு நடை, 
எதுகை, மோனை, இயைபு நயங்களும் 
துள்ளி விளையாடும்.

சாதனைகள்...‘

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை ,

'தமிழக அரசு’ என்ற வாக்கியம்,
'வாய்மையே வெல்லும்’ என்ற வாக்கியம், நிறைவேற்றிய  அண்ணாவே!

சுவாரஸ்ய‌ங்கள் -

எழுத்தாளர் மட்டுமல்ல...
பேச்சாளர்,
 நடிகர்,  
ஓவியர்,
அரசியல் தலைவரும் கூட!

 அண்ணாவே.....

இவ்வுலகை விட்டு நீங்கினாலும் உங்கள் நினைவுகள் என்றும் அழியாதவையாகவே வாழும்!

திருமதி  ச. இராமலக்ஷ்மி, கணித ஆஆசிரியை சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள் மழலையர் மற்றும் துவக்கபள்ளி. ராஜபாளையம். விருதுநகர் மாவட்டம்