வாழ்க நீ எம்மான்

காந்தி ஜெயந்தி கவிதை

வாழ்க நீ எம்மான்

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!                                                

அடிமைவாழ் வகன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து,செல்வம், 
குடிமையி னுயர்வு,கல்வி,ஞானமும் கூடி யோங்கிப் 
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்! 
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குளே முதன்மை யுற்றாய்!

டாக்டர்.சி.தங்க லட்சுமி யு.எஸ்.பி. பெண்களுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சி, தென்காசி.