அண்ணல் அம்பேத்கர்..! 034

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அண்ணல் அம்பேத்கர்..! 034

அண்ணல் அம்பேத்கர்

பெற்றோருக்கு கர்வத்தை ஏற்படுத்தும் அளவிற்கு

நாட்டின் ஒவ்வொரு முக்கிய செயலிலும் 

தன் தீராப் பங்கை வகித்தவர்

மடமைகளை கொலுத்த அவதரித்த நாயகன்

மக்களின் அறியாமை என்னும் கண்களை 

மூடி பெண்களின் மானம் காத்தவர்

படிப்பறையில் அனைவரும் சமம் என்றார்

தன் நாட்களை நூலகத்தில் கழித்து

எட்டாத அறிவையும் எட்டி பறித்தவர்

பாகுபாடின்றி வாழ கற்று கொடுத்தவர்

அரசியலமைப்பு சட்டத்தை தன்னந்தனியாக நிறுவியவர்

பாரதத்  தாயின் அருமை புதல்வனானார்

விடுதலைக்கு தன் குரலை கொடுத்தவர்

புரட்சியை நாடெங்கும் வெள்ளப்பெருக்கு ஆக்கினார்

தீண்டாமைக்கு தீயிட்டவர் தாழ்ந்தோருக்கு நண்பனானார்

உறங்கி கிடக்கும் அண்ணலே எங்கள்

கூக்குரலால் மீண்டும் வந்து காப்பாயாக!

-பா.கீர்த்தனா
திருப்பூர்