அண்ணா என்னும் அற்புதம்...! 031
அறிஞர் அண்ணா அறிவு ச்சுடர் விருது கவிதை போட்டி
அண்ணா என்னும் அற்புதம்
அறிஞர்கள் வரிசையில்
அழகான நித்திலம்
அரசியல் வாழ்விலோ
அற்புத சாசனம்
கஞ்சியின் இரத்தினம்
காலத்தின் சரித்திரம்
தமிழகம் கண்டிட்ட
தலையாய முதல்வராம்
ஆங்கிலத் துறையினில்
ஆசானாய் ஒளிர்ந்து
அரசியல் முகமன்கள்
கூறியே அழைத்திட
விரைந்ததே வைரம்
விடியலைத் தந்திட
கடமையில் மிளிர்ந்தார்
கண்ணியத் திலகமாய்
சிலேடையில் சிறந்தவர்
சந்தமாய் சொலித்தவர்
மேடைகள் கண்டவர்
மேதகு அறிஞர்
திரைப்படம் மூலமாய்
தங்கமாய் நின்றவர்
படைப்பிலே சிறந்தவர்
பண்பாடு மிக்கவர்
அண்ணாவின் பாதையில்
அடிபற்றிச் சென்றவர்
வாழ்விலே உயர்வது
திண்ணமாய் நின்றது
எத்தனை அறிஞர்கள்
வந்தாலும் என்ன
பேரறிஞர் என்றால்
இவரின்றி உளரோ
சாதியம் ஒழிந்திட
சமத்துவம் நிலைத்திட
ஆயுதம் ஆனவர்
பகுதியாய் இவரே
இறந்தாலும் வாழ்வது
இறைவனின் செயலே
வையகம் உளவரை
மறவாது இவரை
வையகம் உளவரை
மறவாது இவரை
- புவனா பிரகாஷ்
கோவை.
Comments (0)