அறிஞர் அண்ணா ...! 55
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி
அறிஞர் அண்ணா
சொல்லின் செல்வராய் வீரம் விதைத்து/
நல்லோர் தோன்றிட விதைத்திட்டாய் அறிவுவித்து /
நாக்கு வன்மை ஒன்றை மூலதனமாய்/
நோக்கு வர்மமாய் தன்னகத்தே வைத்தாய் /
கனத்த இதயத்தையும் ஓர் கணம்/
சினம் அகற்றி மென்மையாய் வைத்திடுவாய்/
கடிதம் எழுதும் கலையின் மூலம்/
காத்திட்டாய்
விவேகமாய் தமிழ் மரபை/
தத்துவ ஞானியாய்
ஞாலம் சிறந்தே/
நித்தமும் நிலைத்தாய் செயல் வடிவிலே/ நேர்மையின் சொரூபமாக நேர்த்தி நிறைந்தே/
கூர்மையான பட்டறிவு கொண்ட திருமகனே/
மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாய்
நின்மனதை/
மாற்றம் வேண்டி இறுதிவரை நிலைபடுத்தினாய்/
சரித்திரம் போற்றும் சான்றோனாய் வான்புகழடைந்து/
சாகா வரம் பெற்றது நின்புகழே/
வாழ்க அறிஞர் அண்ணா புகழ்
- சாதனைப் பெண்மணி கவிஞர்
முனைவர் செ .ஆயிஷா
பல்லடம் ,காருண்யம் அறக்கட்டளை நிறுவனர் .
Comments (0)