அறிஞர் அண்ணா ...! 55

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா ...! 55

அறிஞர் அண்ணா

 சொல்லின் செல்வராய்  வீரம் விதைத்து/
 நல்லோர் தோன்றிட விதைத்திட்டாய்  அறிவுவித்து /
நாக்கு வன்மை ஒன்றை  மூலதனமாய்/ 
நோக்கு  வர்மமாய் தன்னகத்தே  வைத்தாய் /

 கனத்த  இதயத்தையும் ஓர்  கணம்/ 
சினம் அகற்றி மென்மையாய் வைத்திடுவாய்/
 கடிதம் எழுதும் கலையின் மூலம்/
 காத்திட்டாய் 
விவேகமாய் தமிழ் மரபை/

 தத்துவ ஞானியாய் 
ஞாலம் சிறந்தே/
 நித்தமும் நிலைத்தாய் செயல் வடிவிலே/ நேர்மையின்  சொரூபமாக நேர்த்தி நிறைந்தே/
 கூர்மையான பட்டறிவு கொண்ட திருமகனே/

 மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாய் 
நின்மனதை/
 மாற்றம்  வேண்டி இறுதிவரை நிலைபடுத்தினாய்/
 சரித்திரம் போற்றும் சான்றோனாய்  வான்புகழடைந்து/
 சாகா வரம் பெற்றது நின்புகழே/

வாழ்க அறிஞர் அண்ணா புகழ்

- சாதனைப் பெண்மணி கவிஞர்  
 முனைவர் செ .ஆயிஷா
பல்லடம் ,காருண்யம் அறக்கட்டளை நிறுவனர் .