வானொலி தினம்
வானொலி தினம் கவிதை
வானொலி
வானலை வழியே
வான ஊர்வலமாய்
கானம் பாடும்
கலையான வானொலியே
இசையினை அள்ளி
இன்பமாய்த் தெளிக்கிறாய்
வசையினை பேச்சாக
வாரி வழங்குகின்றாய்
அனைவர் இல்லத்திலும்
அணைத்திடும் பிள்ளையாய்
காதோடு பேசிடும்
காதலும் நீயே
உன்னால் எல்லோர்
உள்ளமும் மகிழும்
அறிவுசார் கதைகளும்
வினா விடைகளும்
நாடகங்களும் சிறுகதைகளும் இனிய நிகழ்ச்சி நிரல்களும்
அற்புதமாய் நடத்தி
அறிவினைப் புகட்டுவாய்
தேனமுது கானமும்
தேனருவியாய் கொட்டிடும்
எண்ணற்ற மனங்கள் கவலைகள் மறந்து
உன் கீதம் இசைத்திடுவரே
வானொலியாக செவிக்கு விருந்தாக
வலம் வரும் நீ வாழிய பல்லாண்டு
தொடரட்டும் உன் சேவை
கிருஷ் அபி இலங்கை
Comments (0)