மகிழ்ச்சி
மகிழ்ச்சி கவிதை
மகிழ்ச்சி
ராமன் கால் பட சாபம் தீர்ந்த அகலிகையின் மகிழ்ச்சி ,
பெற்றோரை சுற்றி வந்து மாங்கனி பெற்ற விநாயகனின் மகிழ்ச்சி,
சீதையின் சூடாமணியை அனுமன்
தர அடைந்த ராமனின் மகிழ்ச்சி,
சகோதரனின் பாதுகையை அரியணையில் வைத்து
அரசாண்ட பரதனின் மகிழ்ச்சி,
கணவனின் தூக்கத்தை தான் வாங்கி
லட்சுமணனின் கடமையில்
உதவிய ஊர்மிளையின் மகிழ்ச்சி,
ஆயுள் கூட்டும் நெல்லியை ஔவைக்குத் தந்த
அதியமானின் மகிழ்ச்சி,
புறாவிற்காக தன் சதையை எடுத்து கருடனுக்கு அளித்த
சிபி சக்கரவர்த்தியின் மகிழ்ச்சி
எனும் அத்தனையும்
மனதை சார்ந்த
மகிழ்வின் சாராம்சங்களே!
-முனைவர் பெ. தமிழ்ச்செல்வி வாலாஜாபேட்டை
Comments (0)