காதல் தாகம்...! 17

அன்பு க் கவி விருது கவிதைப் போட்டி

காதல் தாகம்...! 17

காதல் தாகம்...!

கண்ணே  கலைமானே
கட்டழகுப்   பெட்டகமே //

கொடுத்தேன்  மனதை
உந்தன்   வசமே //

பெண்ணாய்ப்   பிறந்த
வெள்ளி  நிலவே //

பாவலன்   எந்தன்
உயிரும்  நீயே //

கன்னம்   இரண்டும்
மலரின்   இதழ்கள் //

கூரிய   விழியோ
வாளின்  முனைதான் //

காதல்   தாகம்
வாட்டுது  மானே //

முத்தம்  தந்தால்
தணியும்   தானே //

மோகத்   தீயில்
மூழ்க  வைத்தாய் //

முள்ளாய்  நீயும்
நெஞ்சில்  தைத்தாய் //

உணர்வில்  கலந்த
சின்னப்  பெண்ணே //

இல்லறத்  துணையாய்
வருவாய்  கண்ணே //

ப. குமரகுரு.