காதல் தாகம்...! 17
அன்பு க் கவி விருது கவிதைப் போட்டி
காதல் தாகம்...!
கண்ணே கலைமானே
கட்டழகுப் பெட்டகமே //
கொடுத்தேன் மனதை
உந்தன் வசமே //
பெண்ணாய்ப் பிறந்த
வெள்ளி நிலவே //
பாவலன் எந்தன்
உயிரும் நீயே //
கன்னம் இரண்டும்
மலரின் இதழ்கள் //
கூரிய விழியோ
வாளின் முனைதான் //
காதல் தாகம்
வாட்டுது மானே //
முத்தம் தந்தால்
தணியும் தானே //
மோகத் தீயில்
மூழ்க வைத்தாய் //
முள்ளாய் நீயும்
நெஞ்சில் தைத்தாய் //
உணர்வில் கலந்த
சின்னப் பெண்ணே //
இல்லறத் துணையாய்
வருவாய் கண்ணே //
ப. குமரகுரு.
Comments (0)